|  | பொ-ரை:  போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும், பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள் வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும். கு-ரை:   செருத்தனை-போரை. சேண்-புகழால் நீண்ட. எருத்து - பிடரி. இற-நொறுங்க. இறை-சிறிதே. அருத்தனை-பொருள் வடிவானவனை. திருத்தன்-அழகியவன்.
 |