| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 6 - 4 |  | 
			
			| விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
 உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
 அடைவர் போலரங் காகவா ரூரரே.
 |  |  
			|  | 4 |  
			|  | பொ-ரை: திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர். கு-ரை: சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி.
 |  
			|  |  |