|  | பொ-ரை:  தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப்பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர். கு-ரை:  அரற்றினால் - பல்காலும் சொன்னால். செய்யபாதம் - சிவந்த திருவடிகள். வையம் - உலகம்.
 |