| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 7 - 11 |  | 
			
			| விண்ட மாமலர் மேலுறை வானொடும் கொண்டல் வண்ணனுங் கூடி யறிகிலா
 அண்ட வாணன்த னாரூ ரடிதொழப்
 பண்டை வல்வினை நில்லா பறையுமே.
 |  |  
			|  | 11 |  
			|  | பொ-ரை: விரிந்த மலர்மேலுறை பிரமனும், மேக வண்ணனாகிய திருமாலும் கூடி அறியகில்லாத திருவாரூர் அண்டவாணனது திருவடிகளைத் தொழப் பழைய வல்வினைகள் நில்லாமற் கெடும். கு-ரை: கொண்டல் - மேகம். ஆரூர் அண்டவாணன் தன் அடிதொழ எனக்கொண்டு கூட்டுக.
 |  
			|  |  |