| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 86 - 3 |  | 
			
			| வந்திவ் வாறு வளைத்தெழு தூதுவர் உந்தி யோடி நரகத் திடாமுனம்
 அந்தி யின்னொளி தாங்கும்வாட் போக்கியார்
 சிந்தி யாவெழு வார்வினை தீர்ப்பரே.
 |  |  
			|  | 3 |  
			|  | பொ-ரை: வந்து இவ்வாறு வளைத்தெழுகின்ற எமதூதுவர்கள் மனம் உந்துதலால் ஓடி நரகத்து இடுவதன் முன்னம் அந்தியின் செவ்வொளி தாங்கிய மேனியராகிய வாட்போக்கியிறைவர் தம்மைச் சிந்தித்து எழுவார்களின் வினை தீர்ப்பர். கு-ரை: இவ்வாறு - இவ்விடம். உந்தி - நும்மைச் செலுத்தி. அந்தியின்னொளி - செவ்வொளி.
 |  
			|  |  |