| 
	
	| முகப்பு | தொடக்கம் |  
				|  |  
			
			| பாடல் எண் : 96 - 9 |  | 
			
			| கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை எப்பற் றியறி தற்கரி யாயருள்
 அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
 எப்பற் றும்மிலே னெந்தை பிரானிரே.
 |  |  
			|  | 9 |  
			|  | பொ-ரை: திருமாலால் அறிதற்கரியவனே! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை. கு-ரை: திருமால் பிரமன் - திருமாலும் பிரமனும். எய்ப்பு அற்று - துன்பம் இன்றி. உன்னை எப்பெற்றியுடையவன் என்று அறிதற்கு அரியவனே என்க. கைப்பற்றியருள் எனக் கூட்டுக.
 |  
			|  |  |