|  |  | பாடல் எண் :1125 |  | | விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல்
 உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை
 அடைவர் போலரங் காகவா ரூரரே.
 | 
 |  | 4 |  | பொ-ரை: திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர். கு-ரை: சீரை - கிழிந்த சீலை அல்லது மரவுரி.
 | 
 |