|  |  | பாடல் எண் :1152 |  | | எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த் திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
 கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
 கரிய ராகிநின் றாரன்னி யூரரே.
 | 
 |  | 9 |  | பொ-ரை: தீவண்ண மேனியரும், எலும்பணிந்து இன்புறுவாரும்,திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும், மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே. கு-ரை: எரிகொள்மேனி - நெருப்பினது சிவந்த நிறத்தைக் கொண்ட திருமேனி. மூவெயில் - மூன்று கோட்டைகள். செற்றவர் - அழித்தவர்.
 | 
 |