| 
			 |  பாடல் எண் :1176 |  பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார் 	அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார் 	நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் 	எந்த மையுடை யாரிளங் கோயிலே. |  
  |  | 3 |  பொ-ரை: நெஞ்சமே! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும்,ஆனை அஞ்சுமாறு உரித்தவனும், அனல் ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்நினைப்பால் வாழ்வாய். கு-ரை: பஞ்சமந்திரம் - 'ஈசானஸ் ஸர்வவித்யாநாம்' எனத் தொடங்கும் ஐந்து மந்திரங்கள். ஓதும் பரமன் - அம்மந்திரங்களால் ஓதப்படும் முழுமுதல். ஆனை அஞ்ச உரித்து என மொழி மாற்றிப் பொருளுரைக்க. அனலாடுவார் - தீயேந்தி ஆடுபவர். நெஞ்சமே! நினைந்திரு. வாழி முன்னிலையசை. இதனால் மேற்குறித்த மந்திரங்கள் வேதங்களின் தெளிவாயுள்ளவை என்றதும் அவற்றால் இறைவனை வழிபடுக என்றதும் ஆயிற்று. |  
  |