| 
			 |  பாடல் எண் :1313 |   படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர் 	சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் நீற்றினர் 	உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர் 	அடையு முள்ளத் தவர்வினை யல்குமே. |  
  |  | 9 |  பொ-ரை:  பூதப்படை கொண்டவரும், வேதத்தவரும், இனியகீதத்தவரும், சடையிற்கொண்ட கங்கையினரும், சாந்தமெனப் பூசும் வெண்ணீற்றினரும், தோலை உடையாக உகந்தவரும் ஆகிய பெருமான் உறைகின்ற ஒற்றியூரை அடையும் உள்ளத்தவர்களின் வினைகள் சுருங்கும். கு-ரை:  படைகொள்பூதத்தர் - பூதப்படை கொண்டவர். வேதத்தர் - வேதமோதுபவர். கீதத்தர் - இசைபாடுபவர். சாந்த வெண்ணீற்றினர் - வெண்ணீற்றைச் சாந்தமாகக் கொள்பவர். உடையும் தோல் உகந்தார் - தோலையும் உடையாக ஏற்றுக்கொண்டவர். அல்கும் - சுருங்கும். |  
  |