|  |  | பாடல் எண் :1360 |  | | குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமும் தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான்
 அழக னாவடு தண்டுறை யாவெனக்
 கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.
 | 
 |  | 6 |  | பொ-ரை:  இவ்வழகுடைய பெண், கொன்றை மலர்களும், கூவிளந்தளிர்களும், ஊமத்தமலர்களும் சூடிய சடையும், தையல் ஒரு பாகமும் கொண்ட ஆவடுதண்டுறைக்குரிய அழகனே என்று விரும்பி அழைத்தலால், கைவளைகள் கழலுகின்ற நிலைமையள் ஆயினள். கு-ரை:  குழல் - சடைமுடி. கூவிளம் - வில்வம். கூவிளம் மத்தம், தழல் இவற்றைத் தாங்கினான் - தையல் - பார்வதி. ஓர் பாகமாத் தாங்கினான்  - ஒரு பாகத்தே கொண்டான். கைவளை கழலும், உடல் இளைக்கும் நிறையழியும் என்றவாறு.
 | 
 |