|
பாடல் எண் :1446 | நீண்ட மாலொடு நான்முகன் தானுமாய்க் காண்டு மென்றுபுக் கார்க ளிருவரும் மாண்ட வாரழ லாகிய வானையார் காண்ட லானைகண் டீர்கட வூரரே. |
| 10 | பொ-ரை: நெடியோனாகிய திருமாலும், நான்முகனும் காண்போம் என்று ஆணவத்தாற் கருதிப் புகுந்தும் காண்டற்கரியவராய் மாட்சி உடைய பேரழலாக நிமிர்ந்த ஆனையார்; கடவூர்த் தலத்து இறைவர் காண்டற்குரிய ஆனைபோல்வர்; காண்பீர்களாக. கு-ரை; காண்டும் - அடிமுடி காண்போம். மாண்ட - செருக்கு அழிந்த. காண்டலானை - அனைவரும் காணத்தக்க ஆனைபோன்றவர். |
|