|  |  | பாடல் எண் :1460 |  | | குறைவி லோங்கொடு மாநுட வாழ்க்கையால் கறைநி லாவிய கண்டனெண் தோளினன்
 மறைவ லான்மயி லாடு துறையுறை
 இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே.
 | 
 |  | 5 |  | பொ-ரை:  திருநீலகண்டனும், எட்டுத் தோளினனும், வேதம் வல்லவனுமாகிய மயிலாடுதுறை உறையும் இறைவன் நீண்ட கழல்களை ஏத்தி இருந்தால், கொடிய மானிட வாழ்க்கையால் வருகின்ற குறைவு சிறிதும் இல்லாதவராவோம். கு-ரை:  கொடு - தீய. மீண்டும் மீண்டும் பிறவிக்கேதுவாய வினை தேடலால் தீயது என்றார். நீள் கழல் - அழிவில்லாத திருவடிகளை; ஏத்தியிருக்கும் பிறவி வாய்க்குமானால் அம்மானுட வாழ்க்கையால் வினை தேடுதலாகிய குறையிலை என்க.
 | 
 |