|
பாடல் எண் :1465 | நீணி லாவர வச்சடை நேசனைப் பேணி லாதவர் பேதுற வோட்டினோம் வாணி லாமயி லாடு துறைதனைக் காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே. |
| 10 | பொ-ரை: நீண்ட நிலவினையும், அரவத்தையும் சடையில் விரும்பிச் சூடியுள்ளவனைப் பேணாதவர் பேதுறும்படி விலக்கினோம்; ஒளிபொருந்திய மயிலாடுதுறையினைக் காணில், ஆர்க்கும் கடுந்துயரங்கள் இல்லை. கு-ரை: நேசன் - அன்பனை. பேணிலாதவர் - விரும்பாதவர். பேதுற - துன்புற. ஓட்டினோம் - தீர்க்கச்செய்தோம். வாள்நிலா - ஒளி நிலவும் புகழ். காணில் - தரிசித்தால். கடுந்துயர் - இறப்பு முதலிய மிக்க துன்பங்கள். |
|