|  |  | பாடல் எண் :1483 |  | | கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார்
 பேடு மாணும் பிறரறி யாததோர்
 ஆடு நாக மசைத்த அடிகளே.
 | 
 |  | 8 |  | பொ-ரை:  செங்கோடலும், வெண்கோடலும், கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால், வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர், ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர். கு-ரை:  கோடல் - காந்தள் மலர். புறவு - காடு. அணி - அழகு செய்கின்ற. வண்டசைப் பாடல்கேட்கும் பைஞ்ஞீலி என்க. பேடு ஆணும் - பேடாயும் ஆணாயும் இருப்பவர். பேடென்றும் (பெண்ணென்றும்) ஆணென்றும் பிறரறியாததோர் அடிகள் என்க.
 | 
 |