|  |  | பாடல் எண் :1487 |  | | கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
 விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
 திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே.
 | 
 |  | 2 |  | பொ-ரை:  கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும், மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும், அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின், எனக்கு இடர்களே இல்லை. கு-ரை:  கருப்புவெஞ்சிலை - கரும்பாகிய கொடிய வில்லையுடைய. காமன் - மன்மதன் காய்ந்தவன் - எரித்தவன். பொருப்பு வெஞ்சிலையால் - இமையவில்லால். புரம் - மூன்று கோட்டைகளை. செற்றவன் - அழித்தவன். விருப்பன் - விரும்புதற்கு உரியவன். இடர் - துன்பம்.
 | 
 |