|  |  | பாடல் எண் :1563 |  | | கூடி னானுமை யாளொரு பாகமாய் வேட னாய்விச யற்கருள் செய்தவன்
 சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
 காட னாரடி யேயடை நெஞ்சமே.
 | 
 |  | 6 |  | பொ-ரை:  நெஞ்சமே! உமையாளை ஒருபாகமாய்க் கூடியவரும், விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும். உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக. கு-ரை:  உமையாளொரு பாகமாய்க் கூடினான் என்க. விசயன் - அருச்சுனன். சேடனார் - பெருமையுடையவர். சிந்தை மேய வெண் காடனார் - சிந்தையின்கண் எழுந்தருளிய வெண்காடனார்.
 | 
 |