பாடல் எண் :1613
நீள மாநினைந் தெண்மல ரிட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.

2
பொ-ரை: வட்டமாகவும், பெரிதாகவும் ஓடுகின்ற கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர், தம்மை இடைவிடாது நினைந்து எண்வகை மலர்களால் வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர்.
கு-ரை: நீளமா-இடைவிடாது. கோளவல்வினையும்-கொடுமை பொருந்திய வலிய வினைகளையும். ஆல்-அசை. வாளம்-வட்டமாக. மால் இழியும்-பெரிதாக ஓடுகின்ற. வேலி என்பது வேளி எனத் திரிந்தது,