|  |  | பாடல் எண் :1625 |  | | கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும் மிக்க வெண்டலை மாலை விரிசடை
 நக்க னாகிலும் நாரையூர் நம்பனுக்
 கக்கி னாரமு மம்ம வழகிதே.
 | 
 |  | 4 |  | பொ-ரை:  திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும், கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும், மிகுந்த வெண்தலைமாலையும், விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை:   தூவல்-தூவி; இறகு. கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன். கூவிளங்கண்ணி- வில்வமாலை. மிக்க- பலவாய. நக்கன்-நிர்வாணி. அக்கின் ஆரம்-என்பு மாலை.
 | 
 |