|  |  | பாடல் எண் :1631 |  | | கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை எடுத்த வாளரக் கன்தலை யீரைஞ்சும்
 நடுக்கம் வந்திற நாரையூ ரான்விரல்
 அடுத்ததன்மையு மம்ம வழகிதே.
 | 
 |  | 10 |  | பொ-ரை:  கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும். கு-ரை:  கடுக்கை-கொன்றை. அம்-அழகிய. நடுக்கம் வந்து இற-நடுக்கமடைந்து நொறுங்க. அடுத்த-ஊன்றிய.
 | 
 |