|  |  | பாடல் எண் :1645 |  | | விழவி னோசை யொலியறாத் தண்பொழில் பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
 அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
 குழக னார்திருப் பாதமே கூறுமே.
 | 
 |  | 4 |  | பொ-ரை:  விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும், தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும், அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக. கு-ரை:  ஓசை - இன்னதென அறியாத ஆரவாரம். ஒலி - இசை முதலிய ஒலி நிகழ்ச்சிகள். பழகினார் - தம்மொடு அன்பு செலுத்திப் பழகினார். அழல்கையான் அமரும் கோளிலி என்க. குழகன் - என்றும் இளையன்.
 | 
 |