|
| பாடல் எண் :1692 | அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே. |
| | 3 | பொ-ரை: அன்பே வடிவானவனும், அடியார்கள் துன்பங்களை நீக்குபவனும், செம்பொன் மேனியனும் விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவனும் ஆகிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரில் உள்ள நம் பெருமானைக் கண்டு நான் உய்யப் பெற்றேன். கு-ரை: இடர்-துன்பம். தென்புத்தூர்-கடுவாயாற்றின் தென் கரையிலமைந்த புத்தூர். நம்பன்-மேலானவன், பழையவன். |
|