|
பாடல் எண் :1709 | நற்ற வம்செய்த நால்வர்க்கு நல்லறம் உற்ற நன்மொழி யாலருள் செய்தநல் கொற்ற வன்குரங் காடு துறைதொழுப் பற்றுந் தீவினை யாயின பாறுமே. |
| 10 | பொ-ரை: நல்ல தவம் புரிந்தவர்களாகிய சனகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும் நல் அறம் மிகுந்த நன்மொழியால் அருள் செய்தவனாகிய நல்ல கொற்றவனுறைகின்ற குரங்காடுதுறையைத் தொழுதால் பற்றுகின்ற தீவினையாகியவை கெடும். கு-ரை: நால்வர். -சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வர் உற்ற -பொருத்தமான. நல்மொழி-நல்ல உபதேச மொழி. பற்றும் -நம்மைப் பிடிக்கும். பாறும்-அழியும். |
|