|
பாடல் எண் :1740 | தேடு வார்பிர மன்திரு மாலவர் ஆடு பாதம் அவரு மறிகிலார் மாட வீதி வலஞ்சுழி யீசனைத் தேடு வானுறு கின்றதென் சிந்தையே. |
| 8 | பொ-ரை: பிரமனும், திருமாலும் தேடுவாராகி இறைவனின் ஆடும் திருவடியை அறியும் ஆற்றல் இலராகவும், மாடங்கள் நெடிதுயர்ந்த வீதிகளை உடைய திருவலஞ்சுழி ஈசனை என் சிந்தை தேடுவதற்காக உறுகின்றது! கு-ரை: ஆடுபாதம் - அருள்செய்யும் திருவடியாகிய தூக்கிய திருவடியை. |
|