|
பாடல் எண் :1878 | தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான் காண்டலுமெளி யன்னடி யார்கட்குப் பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக் காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான். |
| 4 | பொ-ரை: தூண்டிய சுடர்போல் ஒக்கின்ற சோதிவடிவினனாகிய பெருமான் அடியார்களுக்குக் காண்டல் எளியவன்; பாண்டிக் கொடுமுடி மேவிய பரமனைக் காண்போம் என்று கூறுவார்க்கு ஏதும் கருதவொண்ணா இயல்பினோன். கு-ரை: தூண்டிய சுடர்போல் ஒக்கும் - தூண்டப்பட்ட விளக்குப்போல என்று உவமை சொல்லத்தகும். காண்டலும் எளியன் - காட்சிக்கும் எளியன். அடியார்களுக்குக் காண்டலும் எளியன் என்க. காண்டும் என்பவர்க்கு - எப்படியேனும் கண்டே தீருவேன் என்று செருக்கோடு காண்பார்க்கு. ஏதும் கருத்தொணான் - எந்த அளவிலும் கருத்தின்கண் புலப்படமாட்டாதவன். |
|