|  |  | பாடல் எண் :1893 |  | | கொல்லை மால்விடை யேறிய கோவினை எல்லி மாநட மாடு மிறைவனைக்
 கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச்
 சொல்ல வேவினை யானவை சோருமே.
 | 
 |  | 4 |  | பொ-ரை: முல்லைநிலத்து விடையேறிய அரசனும், இரவில் மகாதாண்டவம் புரியும் இறைவனும் ஆகிய, கற்களால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த நாகைக்காரோணனைச் சொல்ல வினைகள் சோரும். கு-ரை: கொல்லை - முல்லை நிலத்துக்குரிய. மால்விடை - திருமாலாகிய எருதினை. ஏறிய - ஊர்தியாக ஏறிய. கோவினை - தலைவனை. எல்லி - இரவு. மா - சிறந்த. கல்லினார்மதில் - கற்களினால் பொருத்திக்கட்டப்பட்ட. சோரும் - அழியும்.
 | 
 |