|
பாடல் எண் :1902 | தேனை வென்றசொல் லாளொடு செல்வமும் ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி ஞான நாயக னைச்சென்று நண்ணுமே. |
| 3 | பொ-ரை: தேனை வென்ற சொல்லை உடையவளாகிய மனைவியோடு செல்வமும் கெட்டு உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டு வேடர்கள் கருதும் காட்டுப்பள்ளியின் ஞானநாயகனைச் சென்று நண்ணுவீராக. கு-ரை: தேனைவென்ற - தேனினும் இனிய. சொல்லார் - சொல்லையுடைய பெண்கள். ஊனைவிட்டு - உடலையும் விட்டு. பெண்டிர் செல்வம் உடல் இவை பிரிவதன் முன்; இறக்குமுன்பு என்க. கானவேடர் - காட்டில் வாழும் வேடர். கருதும் - எண்ணி வழிபடும். ஞானநாயகன் - பேரறிவின் தலைவன். நண்ணும் - அடைந்து வழிபடுங்கள். |
|