|  |  | பாடல் எண் :1950 |  | | ஏழு மாமலை யேழ்பொழில் சூழ்கடல் ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
 பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
 ஏழுஞ் சூழடி யேன்மனத் துள்ளவே.
 | 
 |  | 7 |  | பொ-ரை: ஏழுமலை ஏழுபுவனம் ஏழ்கடல் போற்றும் இராவணனது ஏழிசைகேட்டு அருள்செய்தவன். அவன் திருவடிகள் எழுபிறவிகளிலும் என்னுள்ளத்தின்கண்ணே உள்ளன. கு-ரை: ஏழுமாமலை - கயிலை தவிர்ந்த ஏழுமலைகள். பொழில் - தீவு. கடல் ஏழு - பாற்கடல் முதலியன. நரம்பு ஏழு - ஏழு (சப்த) சுரங்கள். ஏழும் சூழ் - ஏழ்பிறப்பிலும்.
 | 
 |