|
| பாடல் எண் :1999 | ஆதி யானை அமரர் தொழப்படும் நீதி யானை நியம நெறிகளை ஓதி யானை உணர்தற் கரியதோர் சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே. |
| | 6 | பொ-ரை: முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமயெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஓப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்: காண்பீராக. கு-ரை: ஆதியானை -முதலில் தோன்றியவனை. நியமம் - செய்வன தவிர்வனவாய வரையறை. நெறி - நூல்வழி. |
|