|
| பாடல் எண் :2001 | ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும் வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச் சாதிப் பானைத் தவத்தினை மாற்றங்கள் சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே. |
| | 8 | பொ-ரை: முதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்சகவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக. கு-ரை: ஆதிப்பால் - முதன்மைப் பகுதியான. அட்ட மூர்த்தியை - எட்டு வடிவங்களாயிருப்பவனை. நம்மேல் வினை வெந்தற வேதிப்பான் என்க. வேதித்தல் - அறிவித்தல். விரும்பு தவத்திடை சாதிப்பானை - நம்மைத் தவத்தின்கண்ணே நிறுத்துபவன். சாதித்தல் - முடித்தல். மாற்றங்கள் - நாம் செய்யும் தவறுகள். சோதிப்பான் - ஆராய்ந்து களைபவன். |
|