|
| பாடல் எண் :2053 | இளமை கைவிட் டகறலு மூப்பினார் வளமை போய்ப்பிணி யோடு வருதலால் உளமெ லாமொளி யாய்மதி யாயினான் கிளமை யேகிளை யாக நினைப்பனே. |
| | 28 | பொ-ரை: இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ளமெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாகயான் நினைப்பேன். கு-ரை: அகறலும் - நீங்கியதும் மூப்பினார் - முதுமையை உடையவராய் இகழ்ச்சி குறித்த பன்மை, வளமைபோய் - உடல்வளம் கெட்டு பிணியோடு - நோயோடு மதியாயினான் - அறிவின் வடிவமானவன். கிளமையே கிளையாக நினைப்பன் - அவ்வுறவையே உறவாக எண்ணுபவன். |
|