|
பாடல் எண் :2073 | நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலன் சென்று நீரிற் குளித்துத் திரியிலென் என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே. |
| 8 | பொ-ரை: நன்கு தவம்நோற்றாலும், உண்ணாவிரதம் கிடப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், சென்று நீரிற்குளித்துத் திரிந்தாலும் என்ன பயன்? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி பற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை. கு-ரை: நோற்றல் - தவம் செய்தல். குன்றம் - மலை. இருந்தவம் - பெரியதவம். |
|