எப்போதும்(ம்) இறையும் மறவாது, நீர்; முப்போதும் பிரமன் தொழ நின்றவன், செப்பு ஓதும் பொனின் மேனிச் சிவன் அவன், அப் போதைக்கு, ழுஅஞ்சல்!ழு என்னும்-ஆரூரனே.
சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர், அடைகிலா அரவை அரை ஆர்த்தவர், படையின் நேர் தடங்கண் உமை பாகமா அடைவர்போல், இடுகாடர்-ஆரூரரே.
விண்ட வெண்தலையே கலன் ஆகவே கொண்டு அகம் பலி தேரும் குழகனார்; துண்டவெண்பிறை வைத்த இறையவர் அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே.
விடையும் ஏறுவர்; வெண் தலையில் பலி கடைகள் தோறும் திரியும் எம் கண்ணுதல்; உடையும் சீரை; உறைவது காட்டுஇடை; அடைவர்போல், அரங்குஆக; ஆரூரரே.
துளைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்; வளைக்கையாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.
பண்ணின் இன்மொழியாளை ஓர்பாகமா, விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே, சுண்ண-நீறு மெய்ப் பூசி, சுடலையின் அண்ணி ஆடுவர்போலும்-ஆரூரரே.
மட்டு வார் குழலாளொடு மால்விடை இட்டமா உகந்து ஏறும் இறைவனார்- கட்டுவாங்கம், கனல், மழு, மான் தனோடு, அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே.
தேய்ந்த திங்கள் கமழ் சடையன்; கனல் ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார்; காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் ஆய்ந்த நால்மறை ஓதும் ஆரூரரே.
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி, அங்கு இண்டை செஞ்சடை வைத்த இயல்பினான்; கொண்ட கோவண ஆடையன்கூர் எரி அண்டவாணர் அடையும் ஆரூரரே.
மாலும் நான்முகனும்(ம்) அறிகிற்கிலார்; காலன் ஆய அவனைக் கடந்திட்டுச் சூலம் மான்மறி ஏந்திய கையினார்ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே.
கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி, பக்கமே பகுவாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய், அக்கினோடு அரவு ஆர்ப்பர் - ஆரூரரே.
எந்த மா தவம் செய்தனை, நெஞ்சமே!- பந்தம் வீடு அவை ஆய பராபரன் அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே?
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு இண்டைமாலை புனைந்தும், இராப்பகல் தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய், என்பு எலாம் நெக்கு, இராப்பகல் ஏத்தி நின்று, இன்பராய் நினைந்து, என்றும் இடை அறா அன்பர் ஆமவர்க்கு அன்பர்-ஆரூரரே.
முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம், அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு, நீர், முரண்-தடித்த அத் தக்கன் தன் வேள்வியை அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே!
எம் ஐயார் இலை; யானும் உளேன் அலேன்; எம்மை யாரும் இது செய வல்லரே? ழுஅம்மை யார், எனக்கு?ழு என்று என்று அரற்றினேற்கு அம்மை ஆரத் தந்தார், ஆரூர் ஐயரே.
தண்ட ஆளியை, தக்கன் தன் வேள்வியை,- செண்டு அது ஆடிய தேவரகண்டனை, கண்டு கண்டு இவள் காதலித்து அன்பு அது ஆய்க் கொண்டி ஆயின ஆறு, என் தன் கோதையே!
இவள் நமைப் பல பேசத் தொடங்கினாள்; அவணம் அன்று எனில், ழுஆரூர் அரன்ழு எனும்; பவனி வீதி விடங்கனைக் கண்டு இவள், தவனி ஆயின ஆறு, என் தன் தையலே!
நீரைச் செஞ்சடை வைத்த நிமலனார், கார் ஒத்த(ம்) மிடற்றர், கனல் வாய் அரா- ஆரத்தர், உறையும்(ம்) அணி ஆரூரைத் தூரத்தே தொழுவார் வினை தூளியே.
உள்ளமே! ஒன்று உறுதி உரைப்பன், நான்: வெள்ளம் தாங்கும் விரிசடை வேதியன், அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் வள்ளல், சேவடி வாழ்த்தி வணங்கிடே!
விண்ட மா மலர்மேல் உறைவானொடும் கொண்டல் வண்ணனும் கூடி அறிகிலா அண்டவாணன்தன் ஆரூர் அடி தொழப் பண்டை வல்வினை நில்லா, பறையுமே.
மை உலாவிய கண்டத்தன், அண்டத்தன், கை உலாவிய சூலத்தன், கண்ணுதல், ஐயன், ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் உய்யல் ஆம்; அல்லல் ஒன்று இலை; காண்மினே!