5.26 திருவன்னியூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1326

காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடம் ஆடும் பரமனார்;
வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே.

1
உரை
பாடல் எண் :1327

செங்கண் நாகம் அரையது; தீத்திரள்
அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்;
கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்;
மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.

2
உரை
பாடல் எண் :1328

ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்;
தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்;
தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.

3
உரை
பாடல் எண் :1329

இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்;
மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை-
வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.

4
உரை
பாடல் எண் :1330

பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்;
கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்;
மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.

5
உரை
பாடல் எண் :1331

திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்;
துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா
வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.

6
உரை
பாடல் எண் :1332

குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி
இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்;
வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும்
வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.

7
உரை
பாடல் எண் :1333

இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்-
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.

8
உரை
பாடல் எண் :1334

நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா,
விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட,
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.

9
உரை
5.27 திருஐயாறு
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1335

சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;
முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.

1
உரை
பாடல் எண் :1336

பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி;
போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர்
கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும்,
ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.

2
உரை
பாடல் எண் :1337

நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே
வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான்,
துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து-
அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.

3
உரை
பாடல் எண் :1338

நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்-
அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்;
பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்
அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.

4
உரை
பாடல் எண் :1339

பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்;
அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும்
கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம்
அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.

5
உரை
பாடல் எண் :1340

புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர்,
மலரும் போதுகளால் பணிய, சிலர்;
இலரும், போதும் இலாததும் அன்றியும்;
அலரும் போதும் அணியும் ஐயாறரே.

6
உரை
பாடல் எண் :1341

பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக்
கங்கை, மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை, மாலை மதியமும், கண்ணியும்,
அங்கமாலையும், சூடும் ஐயாறரே.

7
உரை
பாடல் எண் :1342

முன்னை ஆறு முயன்று எழுவீர்; ழுஎலாம்
பின்னை ஆறு பிரிழு எனும் பேதைகாள்!
மன் ஐ ஆறு மருவிய மாதவன்
தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.

8
உரை
பாடல் எண் :1343

ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி
வானை ஆறு வளாயது காண்மினோ!
நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள்
தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.

9
உரை
பாடல் எண் :1344

அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்;
அரக்கின் சேவடியாள் அஞ்ச, ழுஅஞ்சல்!ழு என்று,
அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே,
அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.

10
உரை