காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட, மாநடம் ஆடும் பரமனார்; வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே.
செங்கண் நாகம் அரையது; தீத்திரள் அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்; கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்; மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்; தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்; தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.
இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்; மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை- வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர் நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்; கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்; மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்; துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.
குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்; வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும் வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்- அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா, விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட, இலங்கை மன்னன் இருபது தோளினை மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்; பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்; முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.
பாகம் மாலை,- மகிழ்ந்தனர்,- பால்மதி; போக, ஆனையின் ஈர் உரி போர்த்தவர் கோகம்மாலை, குலாயது ஓர் கொன்றையும், ஆக, ஆன்நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே.
நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்தன்னுளே வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு, நான், துஞ்சும் போழ்து, நின் நாமத் திரு எழுத்து- அஞ்சும் தோன்ற, அருளும் ஐயாறரே.
நினைக்கும் நெஞ்சின் உள்ளார்; நெடு மா மதில்- அனைத்தும் ஒள் அழல்வாய் எரியூட்டினார்; பனைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர் அனைத்துவாய்தலுள் ஆரும் ஐயாறரே.
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்; அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும் கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம் அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.
புலரும் போதும், இலாப் பட்ட பொன்சுடர், மலரும் போதுகளால் பணிய, சிலர்; இலரும், போதும் இலாததும் அன்றியும்; அலரும் போதும் அணியும் ஐயாறரே.
பங்கு அ(ம்)ம்மாலைக் குழலி, ஓர் பால்நிறக் கங்கை, மாலையர் காதன்மை செய்தவர் மங்கை, மாலை மதியமும், கண்ணியும், அங்கமாலையும், சூடும் ஐயாறரே.
முன்னை ஆறு முயன்று எழுவீர்; ழுஎலாம் பின்னை ஆறு பிரிழு எனும் பேதைகாள்! மன் ஐ ஆறு மருவிய மாதவன் தன் ஐயாறு தொழ, தவம் ஆகுமே.
ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி வானை ஆறு வளாயது காண்மினோ! நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன் அருள் தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே.
அரக்கின் மேனியன்; அம் தளிர் மேனியன்; அரக்கின் சேவடியாள் அஞ்ச, ழுஅஞ்சல்!ழு என்று, அரக்கன் ஈர்-ஐந்துவாயும் அலறவே, அரக்கினான், அடியாலும்-ஐயாறனே.