5.46 திருப்புகலூர்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1527

துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி,
பொன் நக்கன்ன சடை, புகலூரரோ!
மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன்
என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?

1
உரை
பாடல் எண் :1528

இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும்,
நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை,
புரைப்பு இலாத பொழில் புகலூரரை
உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.

2
உரை
பாடல் எண் :1529

ழுஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்!
ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன-
ரோ? சொலாய், மகளே!ழு முறையோ?ழு என்று
பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.ழு

3
உரை
பாடல் எண் :1530

மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை,
தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை,
புன்னைக் காவல் பொழில் புகலூரனை,
என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.

4
உரை
பாடல் எண் :1531

விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை
எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும்
கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில்,
புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!

5
உரை
பாடல் எண் :1532

அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு,
பண்டு நால்மறை ஓதிய பாடலன்;
தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர்
புண்டரீகத்து உளார்-புகலூரரே.

6
உரை
பாடல் எண் :1533

தத்துவம் தலை கண்டு அறிவார் இலை;
தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்;
தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது
தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.

7
உரை
பாடல் எண் :1534

பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர்
கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்;
வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப்
பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.

8
உரை
பாடல் எண் :1535

பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல்
தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா,
புன்னைத் தாது பொழில், புகலூரரை,
ழுஎன் அத்தா!ழு என, என் இடர் தீருமே.

9
உரை
பாடல் எண் :1536

மத்தனாய், மதியாது, மலைதனை
எத்தினான் திரள் தோள் முடிபத்து இற
ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும்
பொத்தினான் புகலூரைத் தொழுமினே!

10
உரை