துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு அணி, பொன் நக்கன்ன சடை, புகலூரரோ! மின் நக்கன்ன வெண்திங்களைப் பாம்பு உடன் என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே?
இரைக்கும் பாம்பும், எறிதரு திங்களும், நுரைக்கும் கங்கையும், நுண்ணிய செஞ்சடை, புரைப்பு இலாத பொழில் புகலூரரை உரைக்குமா சொல்லி ஒள்வளை சோருமே.
ழுஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர்குழல்! ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டன- ரோ? சொலாய், மகளே!ழு முறையோ?ழு என்று பூசல் நாம் இடுதும், புகலூரர்க்கே.ழு
மின்னின் நேர் இடையாள் உமை பங்கனை, தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை, புன்னைக் காவல் பொழில் புகலூரனை, என்னுள் ஆக வைத்து இன்பு உற்று இருப்பனே.
விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை எண்ணி, நாமங்கள் ஓதி, எழுத்து அஞ்சும் கண்ணினால், கழல் காண்பு இடம் ஏது எனில், புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே!
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு, பண்டு நால்மறை ஓதிய பாடலன்; தொண்டர் ஆகித் தொழுது மதிப்பவர் புண்டரீகத்து உளார்-புகலூரரே.
தத்துவம் தலை கண்டு அறிவார் இலை; தத்துவம் தலை கண்டவர் கண்டிலர்; தத்துவம் தலை நின்றவர்க்கு அல்லது தத்துவன்(ன்) அலன், தண் புகலூரனே.
பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர் கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்; வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப் பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.
பொன் ஒத்த(ந்) நிறத்தானும் பொருகடல் தன் ஒத்த(ந்) நிறத்தானும் அறிகிலா, புன்னைத் தாது பொழில், புகலூரரை, ழுஎன் அத்தா!ழு என, என் இடர் தீருமே.
மத்தனாய், மதியாது, மலைதனை எத்தினான் திரள் தோள் முடிபத்து இற ஒத்தினான் விரலால்; ஒருங்கு ஏத்தலும் பொத்தினான் புகலூரைத் தொழுமினே!