5.49 திருவெண்காடு
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1558

பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும்,
பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு
வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

1
உரை
பாடல் எண் :1559

கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்,
ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார்,
வெள்ளியன், கரியன், பசு ஏறிய
தெள்ளியன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!

2
உரை
பாடல் எண் :1560

ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே,
வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ!
தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்-
தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!

3
உரை
பாடல் எண் :1561

பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே;
பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம்
திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!

4
உரை
பாடல் எண் :1562

பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன்
உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள்
கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால்
செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!

5
உரை
பாடல் எண் :1563

கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்;
வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்;
சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்-
காடனார்; அடியே அடை, நெஞ்சமே!

6
உரை
பாடல் எண் :1564

தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்;
புரித்த புன் சடையான்; கயவர் புரம்
எரித்தவன்; மறைநான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன்(ன்), உறை வெண்காடு அடை, நெஞ்சே!

7
உரை
பாடல் எண் :1565

பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
ழுசிட்டன், ஆதிழு என்று(ச்) சிந்தை செய்யவே,
நட்டமூர்த்தி-ஞானச்சுடர் ஆய் நின்ற
அட்டமூர்த்திதன்-வெண்காடு அடை, நெஞ்சே!

8
உரை
பாடல் எண் :1566

ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா
ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும்
கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!

9
உரை
பாடல் எண் :1567

பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர்,
சேலை ஆடிய கண் உமை பங்கனார்,
வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு
மாலை ஆவது மாண்டவர் அங்கமே.

10
உரை
பாடல் எண் :1568

இரா வணம் செய, மா மதி பற்று அவ், ஐ-
யிரா வணம்(ம்) உடையான் தனை உள்குமின்!
இராவணன் தனை ஊன்றி அருள்செய்த
இராவணன் திரு வெண்காடு அடைமினே!

11
உரை