5.53 திருஅதிகைவீரட்டானம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1600

கோணல் மா மதி சூடி, ஓர் கோவண
நாண் இல் வாழ்க்கை நயந்தும், பயன் இலை;
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

1
உரை
பாடல் எண் :1601

பண்ணினை, பவளத்திரள் மா மணி
அண்ணலை, அமரர்தொழும் ஆதியை,
சுண்ணவெண் பொடியான், திரு வீரட்டம்
நண்ணில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

2
உரை
பாடல் எண் :1602

உற்றவர்தம் உறு நோய் களைபவர்,
பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர்,
சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம்
கற்கில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

3
உரை
பாடல் எண் :1603

முற்றா வெண்மதி சூடும் முதல்வனார்
செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ,
வில்-தான் கொண்டு எயில் எய்தவர்; வீரட்டம்
கற்றால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

4
உரை
பாடல் எண் :1604

பல்லாரும் பலதேவர் பணிபவர்,
நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன்,
வில்லால் மூஎயில் எய்தவன், வீரட்டம்
கல்லேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

5
உரை
பாடல் எண் :1605

வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக்
கொண்டான்,-கோல மதியோடு அரவமும்;
விண்டார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
கண்டால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

6
உரை
பாடல் எண் :1606

அரை ஆர் கோவண ஆடையன், ஆறு எலாம்
திரை ஆர் ஒண் புனல் பாய் கெடிலக் கரை-
விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்பால்
கரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?.

7
உரை
பாடல் எண் :1607

நீறு உடைத் தடந்தோள் உடை நின்மலன்,
ஆறு உடைப் புனல் பாய் கெடிலக் கரை
ஏறு உடைக் கொடியான்,-திரு வீரட்டம்
கூறில் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

8
உரை
பாடல் எண் :1608

செங்கண் மால்விடை ஏறிய செல்வனார்,
பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர்,
அம் கண் ஞாலம் அது ஆகிய, வீரட்டம்,
கங்குல் ஆக, என் கண் துயில் கொள்ளுமே?

9
உரை
பாடல் எண் :1609

பூண், நாண், ஆரம், பொருந்த உடையவர்;
நாண் ஆக(வ்) வரைவில்லிடை அம்பினால்,
பேணார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
காணேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

10
உரை
பாடல் எண் :1610

வரை ஆர்ந்த(வ்) வயிரத்திரள் மாணிக்கம்
திரை ஆர்ந்த(ப்) புனல் பாய் கெடிலக் கரை
விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

11
உரை
பாடல் எண் :1611

உலந்தார் வெண்தலை உண்கலன் ஆகவே,
வலம்தான் மிக்க அவ் வாள் அரக்கன்தனைச்
சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம்
புலம்பேன் ஆகில், என் கண் துயில் கொள்ளுமே?

12
உரை
5.54 திருஅதிகைவீரட்டானம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1612

எட்டு நாள்மலர் கொண்டு, அவன் சேவடி
மட்டு அலர், இடுவார் வினை மாயுமால்-
கட்டித் தேன் கலந்தன்ன கெடில வீ-
ரட்டனார் அடி சேருமவருக்கே.

1
உரை
பாடல் எண் :1613

நீளமா நினைந்து, எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறைவிப்பரால்-
வாளமா இழியும் கெடிலக் கரை,
வேளி சூழ்ந்து, அழகு ஆய வீரட்டரே.

2
உரை
பாடல் எண் :1614

கள்ளின் நாள்மலர் ஓர் இரு-நான்கு கொண்டு,
உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார்-
தெள்ளு நீர் வயல் பாய் கெடிலக் கரை,
வெள்ளை நீறு அணி மேனி, வீரட்டரே.

3
உரை
பாடல் எண் :1615

பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு
வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார்-
வீங்கு தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேங்கைத்தோல் உடை ஆடை, வீரட்டரே.

4
உரை
பாடல் எண் :1616

தேனப் போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன்
தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர்-
மீனத் தண் புனல் பாய் கெடிலக் கரை,
வேனல் ஆனை உரித்த, வீரட்டரே.

5
உரை
பாடல் எண் :1617

ஏழித் தொல் மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை ஓட, அகற்றுவார்-
பாழித் தண்புனல் பாய் கெடிலக் கரை,
வேழத்தின்(ன்)உரி போர்த்த, வீரட்டரே.

6
உரை
பாடல் எண் :1618

உரைசெய் நூல்வழி ஒண்மலர் எட்டு இட,
திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால்-
வரைகள் வந்து இழியும் கெடிலக் கரை,
விரைகள் சூழ்ந்து அழகுஆய, வீரட்டரே.

7
உரை
பாடல் எண் :1619

ஓலி வண்டு அறை ஒண்மலர் எட்டினால்
காலை ஏத்த வினையைக் கழிப்பரால்-
ஆலி வந்து இழியும் கெடிலக் கரை,
வேலி சூழ்ந்து அழகு ஆய, வீரட்டரே.

8
உரை
பாடல் எண் :1620

தாரித்து உள்ளி, தட மலர் எட்டினால்
பாரித்து ஏத்த, வல்லார் வினை பாற்றுவார்-
மூரித் தெண்திரை பாய் கெடிலக் கரை,
வேரிச் செஞ்சடை வேய்ந்த, வீரட்டரே.

9
உரை
பாடல் எண் :1621

அட்டபுட்பம் அவை கொளும் ஆறு கொண்டு,
அட்டமூர்த்தி அநாதிதன் பால் அணைந்து,
அட்டும் ஆறு செய்கிற்ப-அதிகை வீ-
ரட்டனார் அடி சேருமவர்களே.

10
உரை