தலை எலாம் பறிக்கும் சமண்கையர் உள்- நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே? அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி நிலையினான் அடியே நினைந்து உய்ம்மினே!
மூக்கினால் முரன்று ஓதி அக் குண்டிகை தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு ஆக்கினான் அணி ஆறை வடதளி நோக்கினார்க்கு இல்லையால், அருநோய்களே.
குண்டரை, குணம் இல்லரை, கூறை இல் மிண்டரை, துரந்த(வ்) விமலன் தனை; அண்டரை; பழையாறை வடதளிக் கண்டரை; தொழுது உய்ந்தன, கைகளே.
முடையரை, தலை முண்டிக்கும் மொட்டரை, கடையரை, கடிந்தார்; கனல் வெண்மழுப்- படையரை; பழையாறை வடதளி உடையரை; குளிர்ந்து உள்கும், என் உள்ளமே.
ஒள் அரிக்கணார் முன் அமண் நின்று உணும் கள்ளரைக் கடிந்த(க்) கருப்பு ஊறலை, அள்ளல் அம் புனல் ஆறை வடதளி வள்ளலை, புகழத் துயர் வாடுமே.
நீதியைக் கெட நின்று அமணே உணும் சாதியைக் கெடுமா செய்த சங்கரன், ஆதியை, பழையாறை வடதளிச் சோதியை, தொழுவார் துயர் தீருமே.
திரட்டு இரைக்கவளம் திணிக்கும் சமண்- பிரட்டரைப் பிரித்த(ப்) பெருமான் தனை, அருள்-திறத்து அணி ஆறை வடதளித் தெருட்டரை, தொழத் தீவினை தீருமே.
ஓது இனத்து எழுத்து அஞ்சு உணராச் சமண் வேதனைப் படுத்தானை, வெங் கூற்று உதை பாதனை, பழையாறை வடதளி நாதனை, தொழ நம் வினை நாசமே.
ழுவாய் இருந்தமிழே படித்து, ஆள் உறா ஆயிரம்சமணும் அழிவு ஆக்கினான் பாய் இரும் புனல் ஆறை வடதளி மேயவன்(ன்)ழு என வல்வினை வீடுமே.
செருத்தனைச் செயும் சேண் அரக்கன்(ன்) உடல், எருத்து, இற(வ்) விரலால் இறை ஊன்றிய அருத்தனை; பழையாறை வடதளித் திருத்தனை; தொழுவார் வினை தேயுமே.