இருந்து சொல்லுவன்; கேண்மின்கள்: ஏழைகாள்! அருந்தவம் தரும், அஞ்சு எழுத்து ஓதினால்; பொருந்து நோய் பிணி போகத் துரப்பது ஓர் மருந்தும் ஆகுவர், மன்னும் மாற்பேறரே.
சாற்றிச் சொல்லுவன்; கேண்மின்: தரணியீர்! ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால், கூற்றை நீக்கிக் குறைவு அறுத்து ஆள்வது ஓர் மாற்று இலாச் செம்பொன் ஆவர், மாற்பேறரே.