ழுமுத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப் புத்தூரன்(ன்) அடி போற்றி!ழு என்பார் எலாம் மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.
ழுபிறைக்கணிச் சடை எம்பெருமான்ழு என்று- கறைக் கணித்தவர் கண்ட வணக்கத்து ஆய் உறக் கணித்து-உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும், புத்தூர்ப் புனிதனே.
அரிசிலின் கரைமேல், அணி ஆர்தரு புரிசை, நம் திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொடும் பரவிப் பணிவார்க்கு எலாம் துரிசு இல் நன்நெறி தோன்றிடும்; காண்மினே!
வேதனை(ம்), மிகு வீணையில் மேவிய கீதனை, கிளரும் நறுங்கொன்றை அம்- போதனை, புனல் சூழ்ந்த புத்தூரனை, நாதனை(ந்), நினைந்து என் மனம் நையுமே.
அருப்புப் போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல் விருப்புச் சேர் நிலை விட்டு, நல் இட்டம் ஆய், திருப் புத்தூரனைச் சிந்தைசெயச் செய, கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும்; காண்மினே!
பாம்பொடு(ம்) மதியும் படர் புன் சடைப் பூம்புனலும் பொதிந்த புத்தூர் உளான், நாம் பணிந்து அடி போற்றிட, நாள்தொறும் சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே.
கனல் அங்கைதனில் ஏந்தி, வெங்காட்டு இடை அனல் அங்கு எய்தி, நின்று, ஆடுவர்; பாடுவர்; பினல் அம் செஞ்சடைமேல் பிலயம் தரு புனலும் சூடுவர் போலும்-புத்தூரரே.
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் ஏற்றினும்(ம்) இசைந்து ஏறுவர்; என்பொடு நீற்றினை அணிவர்; நினைவுஆய்த் தமை, ழுபோற்றி!ழு என்பவர்க்கு அன்பர்-புத்தூரரே.
முன்னும் முப்புரம் செற்றனர் ஆயினும் அன்னம் ஒப்பர், அலந்து அடைந்தார்க்கு எலாம்; மின்னும் ஒப்பர், விரிசடை; மேனி செம்- பொன்னும் ஒப்பர்-புத்தூர் எம் புனிதரே.
செருத்தனால்-தன தேர் செல உய்த்திடும் கருத்தனாய்க் கயிலை எடுத்தான் உடல், பருத்த தோள் கெடப் பாதத்து ஒருவிரல் பொருத்தினார்-பொழில் ஆர்ந்த புத்தூரரே.