5.71 திருவிசயமங்கை
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1780

குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அவ்
வசை இல் மங்கல வாசகர் வாழ்த்தவே,
இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான்
விசைய மங்கையுள் வேதியன்; காண்மினே!

1
உரை
பாடல் எண் :1781

ஆதிநாதன்; அடல் விடைமேல் அமர்
பூதநாதன்; புலி அதள் ஆடையன்;
வேதநாதன் விசயமங்கை உளான்;
பாதம் ஓத வல்லார்க்கு இல்லை, பாவமே.

2
உரை
பாடல் எண் :1782

கொள்ளிடக் கரைக் கோவந்த புத்தூரில்
வெள்விடைக்கு அருள்செய் விசயமங்கை-
யுள் இடத்து உறைகின்ற உருத்திரன்
கிள்ளிட, தலை அற்றது, அயனுக்கே.

3
உரை
பாடல் எண் :1783

திசையும் எங்கும் குலுங்க, திரிபுரம்
அசைய, அங்கு எய்திட்டு, ஆர் அழல் ஊட்டினான்
விசைய மங்கை விருத்தன்; புறத்து அடி
விசையின் மங்கி விழுந்தனன், காலனே.

4
உரை
பாடல் எண் :1784

பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள்
கள்ளம் ஆக்கிக் கலக்கிய கார் இருள்
விள்ளல் ஆக்கி, விசயமங்கைப் பிரான்,
உள்ளல் நோக்கி, என் உள்ளுள் உறையுமே.

5
உரை
பாடல் எண் :1785

ழுகொல்லை ஏற்றுக் கொடியொடு பொன்மலை-
வில்லை ஏற்று உடையான், விசயமங்கைச்
செல்வ, போற்றி!ழு என்பாருக்குத் தென்திசை-
எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே.

6
உரை
பாடல் எண் :1786

கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு
உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி
வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை
நண்பனை, தொழப்பெற்றது நன்மையே.

7
உரை
பாடல் எண் :1787

பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து,
வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை
ஆண்டவன்(ன்) அடியே நினைந்து, ஆசையால்
காண்டலே கருத்து ஆகி இருப்பனே.

8
உரை
பாடல் எண் :1788

வந்து கேண்மின்: மயல் தீர் மனிதர்காள்!
வெந்தநீற்றன், விசயமங்கைப் பிரான்,
சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப்
பந்து ஆக்கி, உயக்கொளும்; காண்மினே!

9
உரை
பாடல் எண் :1789

இலங்கை வேந்தன் இருபதுதோள் இற
விலங்கல் சேர் விரலான் விசயமங்கை
வலம் செய்வார்களும், வாழ்த்து இசைப்பார்களும்,
நலம் செய்வார் அவர், நன்நெறி நாடியே.

10
உரை