திருவின் நாதனும், செம்மலர் மேல் உறை உருவனாய், உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவன் ஆகி, முளைத்தவன் கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர்; காண்மினே!
ழுபெண்டிர், மக்கள், பெருந் துணை, நன்நிதி, உண்டு இறேழு என்று உகவன்மின், ஏழைகாள்! கண்டு கொண்மின், நீர், கானூர் முளையினை, புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே!
தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம் மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்! காயத்தே உளன், கானூர் முளையினை வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!
குறியில் நின்று, உண்டு கூறை இலாச் சமண் நெறியை விட்டு, நிறைகழல் பற்றினேன்: அறியல் உற்றிரேல், கானூர் முளை அவன் செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே.
பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்தன் என்று வியந்திடல், ஏழைகாள்! சித்தர், பத்தர்கள், சேர் திருக்கானூரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே.
கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன், செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை, எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!
நீரும், பாரும், நெருப்பும், அருக்கனும், காரும், மாருதம்-கானூர் முளைத்தவன்; சேர்வும் ஒன்று அறியாது, திசைதிசை ஓர்வும் ஒன்று இலர், ஓடித் திரிவரே.
ஓமத்தோடு அயன்மால் அறியா வணம் வீமப் பேர் ஒளி ஆய விழுப்பொருள், காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்; சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே.
வன்னி, கொன்றை, எருக்கு, அணிந்தான் மலை உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல்- தன்னை வீழத் தனி விரல் வைத்தவன் கன்னி மா மதில் கானூர்க் கருத்தனே.