5.83 திருநாகைக்காரோணம்
திருக்குறுந்தொகை
பாடல் எண் :1890

ழுபாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன்;
பூணத் தான் அரவு ஆமை பொறுத்தவன்;
காணத் தான் இனியான் கடல் நாகைக்கா-
ரோணத்தான்ழு என, நம் வினை ஓயுமே.

1
உரை
பாடல் எண் :1891

வண்டு அலம்பிய வார்சடை ஈசனை,
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை,
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை,
கண்டலும், வினை ஆன கழலுமே.

2
உரை
பாடல் எண் :1892

புனையும் மா மலர் கொண்டு, புரிசடை
நனையும் மா மலர் சூடிய நம்பனை,
கனையும் வார்கடல் நாகைக்காரோணனை,
நினையவே, வினை ஆயின நீங்குமே.

3
உரை
பாடல் எண் :1893

கொல்லை மால்விடை ஏறிய கோவினை,
எல்லி மாநடம் ஆடும் இறைவனை,
கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை,
சொல்லவே, வினை ஆனவை சோருமே.

4
உரை
பாடல் எண் :1894

மெய்யனை, விடை ஊர்தியை, வெண்மழுக்
கையனை, கடல் நாகைக்காரோணனை,
மை அனுக்கிய கண்டனை, வானவர்
ஐயனை, தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

5
உரை
பாடல் எண் :1895

அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை,
விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை,
கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை,
வலம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

6
உரை
பாடல் எண் :1896

சினம் கொள் மால்கரி சீறிய ஏறினை,
இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை,
கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை,
மனம் கொள்வார் வினை ஆயின மாயுமே.

7
உரை
பாடல் எண் :1897

அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து,
ழுஎந்தை! ஈசன்!ழு என்று ஏத்தும் இறைவனை,
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை,
சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.

8
உரை
பாடல் எண் :1898

கருவனை, கடல் நாகைக்காரோணனை,
இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை,
ஒருவனை, உணரார் புரம்மூன்று எய்த
செருவனை, தொழத் தீவினை தீருமே.

9
உரை
பாடல் எண் :1899

கடல் கழி தழி நாகைக்காரோணன் தன்,
வடவரை எடுத்து ஆர்த்த அரக்கனை
அடர ஊன்றிய, பாதம் அணைதர,
தொடர அஞ்சும், துயக்கு அறும் காலனே.

10
உரை