281 | துணி உடையர், தோல் உடையர், என்பார்போலும்; தூய திருமேனிச் செல்வர்போலும்; பிணி உடைய அடியாரைத் தீர்ப்பார்போலும்; பேசுவார்க்கு எல்லாம் பெரியார்போலும்; மணி உடைய மா நாகம் ஆர்ப்பார்போலும்; வாசுகி மா நாணாக வைத்தார் போலும்; அணி உடைய நெடுவீதி நடப்பார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |