303கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்;
    கற்பகம்காண்; காலனை அன்று உதைசெய்தான்காண்;
ஊன் ஏறும் உடைதலையில் பலி கொள்வான்காண்;
             உத்தமன்காண்; ஒற்றியூர் மேவினான்காண்;
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்
     தான்காண்; ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான்காண்-
தேன் ஏறு மலர்ச்சோலைத் திரு ஆரூரில்-திரு
                  மூலட்டானத்து எம் செல்வன்தானே.