| 303 | கான் ஏறு களிற்று உரிவைப் போர்வையான்காண்; கற்பகம்காண்; காலனை அன்று உதைசெய்தான்காண்; ஊன் ஏறும் உடைதலையில் பலி கொள்வான்காண்; உத்தமன்காண்; ஒற்றியூர் மேவினான்காண்; ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல் தான்காண்; ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான்காண்- தேன் ஏறு மலர்ச்சோலைத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே. |