383வான் உற்ற மா மலைகள் ஆனாய், நீயே; வடகயிலை
                          மன்னி இருந்தாய், நீயே;
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய், நீயே; ஒளி
           மதியோடு, அரவு, புனல், வைத்தாய், நீயே;
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய், நீயே; “அடியான்”
             என்று அடி என்மேல் வைத்தாய், நீயே;
தேன் உற்ற சொல் மடவாள் பங்கன், நீயே திரு
                 ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.