Try error :java.sql.SQLException: Closed Resultset: next
429குற்றாலம் கோகரணம் மேவினானை; கொடுங் கைக்
                 கருங்கூற்றைப் பாய்ந்தான் தன்னை;
உற்று ஆலம்-நஞ்சு உண்டு ஒடுக்கினானை; உணரா
                   என் நெஞ்சை உணர்வித்தானை;
பற்று ஆலின்கீழ் அங்கு இருந்தான் தன்னை; பண்
                ஆர்ந்த வீணை பயின்றான் தன்னை;
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை;
        புண்ணியனை; பூந்துருத்திக் கண்டேன், நானே.