51 | வெஞ்சின வெள் ஊர்தி உடையாய், போற்றி! விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி! துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி! தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி! நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி! நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி! அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!-அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!. |