537 | குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்; குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்; புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்; புள் அரசைக் கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்; வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும்; வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்; அண்டத்து உப் புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |