6.55 திருக்கயிலாயம்
போற்றித் திருத்தாண்டகம்
551வே(ற்)ற்று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
     மீளாமே ஆள் என்னைக் கொண்டாய், போற்றி!
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய், போற்றி!
                 ஓவாத சத்தத்து ஒலியே, போற்றி!
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய், போற்றி!
       ஆறு அங்கம் நால்வேதம் ஆனாய், போற்றி!
காற்று ஆகி எங்கும் கலந்தாய், போற்றி!
             கயிலை மலையானே, போற்றி போற்றி!.